இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,38,018 பேருக்கு கொரோனா.. நேற்று 2.58 லட்சம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 2,38,018 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது நேற்றைய பாதிப்பான 2 லட்சத்து 58 ஆயிரத்து 089 மற்றும் நேற்று முன்தின பாதிப்பான 2 லட்சத்து 71 ஆயிரத்து 202 -ஐ விட குறைவாகும்.

இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 76 லட்சத்து 18 ஆயிரத்து 271 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,57,421 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 53 லட்சத்து 94 ஆயிரத்து 882  ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 16,56,341 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 310  பேர் உயிரிழந்தனர். இதனால், இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 86 ஆயிரம் 451 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!