புதுச்சேரியில் நவம்பர்  15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

நவம்பர்  15ஆம் தேதி வரை புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிகப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர்  15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும், இருப்பினும் பண்டிகை சார்ந்த விற்பனைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது. கோவில்களில், கொரோனா பரவல் வழிமுறைகளைப் பின்பற்றி சூரசம்ஹாரம்  மற்றூம் திருவிழாக்கள் நடத்தவும், 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!