இந்தியாவில் மீண்டும் 9 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக 8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது 9 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 66 லட்சத்து 241 ஆயிரத்து 383 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 8, 251 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 40 லட்சத்து 97 ஆயிரத்து 388 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 94,742 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 159 பேர் உயிரிழந்தனர். இதனால், இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 74 ஆயிரம் 111 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!