குறைந்து வரும் கொரோனா தொற்று- மக்கள் நிம்மதி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 42 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 30 நபர்களுக்கும், காரைக்காலில் 10 நபர்களுக்கும், மாஹேவில் 2 நபர்களுக்கும் என மொத்தம் 42 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது மாநிலத்தில் 639 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில் இருவர்  உயிரிழந்ததை அடுத்து  மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1848 உயர்ந்துள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை 1,24,608நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,27,095 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!