பசும்பொனில் தேவர் குருபூஜை: பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை கடந்த 28ஆம் தேதி யாகசாலை பூஜை, கும்பாபிஷேக விழா உடன் ஆன்மீக விழா தொடங்கியது.

இதனை அடுத்து பல்வேறு மாவட்டம் மற்றும் கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தேவரின் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தி செல்கின்றனர்.

இந்த நிலையில் வரக்கூடிய பொதுமக்களை கண்காணிக்கும் விதமாக கமுதி, பசும்பொன் உள்ளிட்ட பகுதிகளில் 94 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு நான்கு ஆதி நவீன ட்ரோன் கேமிராக்கள் பறக்க விடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு தென் மண்டல ஐஜி தலைமையில், 5 டிஐஜி, 34 எஸ் பி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பத்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் தேவர் குருபூஜைக்கு வருபவர்கள் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி வர வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை அடுத்து தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், உதயநிதி எம்.எல்.ஏ உள்ளடோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர் அதனை தொடர்ந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் வந்து தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

இதை அடுத்து பசும்பொன், கமுதி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!