ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாவட்ட அளவில் பரிசு

நியாயவிலைக் கடை ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் பரிசு – ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தேர்வு செய்து அனுப்ப உத்தரவிட்டு அரசாணை வெளியீடு..

தமிழக அரசின் நியாயவிலை கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், எடையாளர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் பரிசு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநில அளவில் விற்பனையாளருக்கு முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக, 5,000 ரூபாய் வழங்க உத்தரவு..

எடையாளருக்கு முதல் பரிசு 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 6,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 4,000 ரூபாய் வழங்கப்பட உள்ளன.

மாவட்ட அளவில் விற்பனையாளருக்கு முதல் பரிசாக, 4,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 3,000 ரூபாய்,

எடையாளருக்கு முதல் பரிசு, 3,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 2,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

இந்த பரிசுகள், ஆண்டு தோறும் உலக உணவு தினமான, அக்டோபர் 16ல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த ஊழியர்களைத் தேர்வு செய்ய, மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆறு பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட அளவில் முதலிடம் பெறும் ஊழியர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதியான ஊழியர்களை தேர்வு செய்து, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவு வழங்கல் துறை உத்தரவு

Translate »
error: Content is protected !!