சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வருகிற 6ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது .இந்த கூட்டத்த்தில், நகர்புற உள்ளாட்சி தேர்தல்,கட்சியின் வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்படும். இக்கூட்டத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.