திமுக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது -எம்.பி.கனிமொழி

திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருவதாக அக்கட்சியின் எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அணைகளில் நீர் இருப்பு அதிகமாக இருந்த போதும் கடந்த அதிமுக அரசு விவசாயத்திற்கு தேவையான நீரினை திறந்து விடாமல் அலட்சியப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.  ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற ஒன்பது மாத காலத்தில் விவசாயத்திற்கு தேவையான நீரினை ஜூன் 1 மற்றும் நவம்பர் 1ஆம் தேதிகளில் சரியான நேரத்தில் திறந்துவிட்டு விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்ததாக கூறினார்.

Translate »
error: Content is protected !!