ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சனையாக மாற்ற வேண்டாம்

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சனையாக மாற்ற வேண்டாம் என வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுத்த நிலையில் ஹிஜாப் இடைக்கால தடைக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மேலும் ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சனையாக மாற்ற வேண்டாம் எனவும் வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Translate »
error: Content is protected !!