ஒமைக்ரான் தொற்று எதிரொலி.. இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவு

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அச்சம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் வணிகம் இன்று சரிவுடன் முடிவடைந்தன.

தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாள் முதல் உலக பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. இதனால் இந்திய பங்குச்சந்தையில் பங்கு விலைகள் சரியத் தொடங்கின. இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 949 புள்ளிகள் குறைந்து 56,747 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 284 புள்ளிகள் சரிந்து 16,912 புள்ளிகளாக உள்ளது.

Translate »
error: Content is protected !!