அனைவரும் விழிப்புடன் இருங்கள்- பிரதமர் மோடி

 

புதிதாக அதிக வீரியத்துடன் உருமாறிய ஒமைக்ரான் என்ற வைரஸை கருத்தில் கொண்டு அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக நாடாளுமன்றம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாட்டு மக்கள் இந்த கூட்டத்தொடரில் ஆக்கபூர்வமான விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என விரும்புகிறார்கள் எனவும், பிரகாசமான எதிர்காலத்திற்காக அனைவரும் பொறுப்புணர்வை அறிந்து செயல்பட வேண்டும் எனவும் கூறினார்.  கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு பதிலளிக்க ஒன்றிய அரசு தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில் அவையின் ஒழுங்கை காக்க வேண்டிய அவசியம் உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், புதிய வகை வைரஸ் மாறுபாட்டை கருத்தில் கொண்டு அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

 

Translate »
error: Content is protected !!