முன்னாள் துணைவேந்தர் விவகாரம்: ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்


அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழகத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு விசாரணையை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் சூரப்பா வழக்கு தொடரப்பட்டது. சூரப்பா விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தமிழக ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் அதற்காக ஆணைய அறிக்கை ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு ஜனவரி 3 தள்ளிவைக்கப்பட்டது

Translate »
error: Content is protected !!