இரவில் வாட்டும் கடும் குளிர்.. உயிரினங்களுக்கு வெப்பமூட்டும் வசதி ஏற்பாடு

உத்தரபிரதேச மாநிலத்தில் இரவில் கடும் குளிர் நிலவுவதால் லக்னோ உயிரியல் பூங்காவில் உள்ள உயிரினங்களுக்கு வெப்பமூட்டும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக குளிர் நிலவுகிறது. இந்நிலையில் லக்னோ உயிரியல் பூங்காவில் வெப்பமூட்டிகளைப் பயன்படுத்தி உயிரினங்களுக்கு வெப்பமான சூழலை உருவாக்கப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு குளிர்கால சூழலுக்கு ஏற்றவாறு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக பூங்கா துணை இயக்குனர் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!