சென்னை மண்டல சிபிஐ இணை இயக்குநராக பெண் ஐ.ஏ.எஸ் நியமனம்


தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி வித்யா ஜெயந்த் குல்கர்னி சென்னை மண்டல இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி வித்யா ஜெயந்த் குல்கர்னி உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளை சிபிஐ இணை இயக்குநர்களாக நியமித்து ஒன்றிய பணியாளர் நல அமைச்சகம் கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது. தமிழக காவல் துறையில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர்,சீருடை பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்டவற்றில்  பொறுப்புகள் வகித்துள்ளார். 1998ம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான வித்யா ஜெயந்த் குல்கர்ணி 5 ஆண்டுகளுக்கு சிபிஐ இணை இயக்குநராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டது.அந்த அடிப்படையில் தற்போது சென்னை மண்டல சி பி ஐ இணை இயக்குனராக சிபி ஐ தலைமை அலுவலகம் நியமித்துள்ளது.

Translate »
error: Content is protected !!