அரசு பள்ளியில் மின் கசிவு காரணமாக தீ விபத்து

 

பரமக்குடி அருகே தெளிசாத்தநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி பொருட்கள் வைப்பு அறையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிசாத்தநல்லூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 70 மாணவர்களும் படிக்கின்றனர். 7 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் பரமக்குடி கல்வி மாவட்டத்தில் செயல்படும் தொடக்கப் பள்ளிகளுக்கான பொருட்கள் வைக்கும் அறை உள்ளது. இன்று வழக்கம்போல் பள்ளி செயல்பட்ட நிலையில் பள்ளி முடிந்து மாலை 4 மணி அளவில் மாணவர்கள் வீடு திரும்பி உள்ளனர். பொருட்கள் வைப்பு அறையில் மின்கசிவு காரணமாக தீ பிடித்துள்ளது. இதனால் அறையில் பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்காக வைத்திருந்த டயர்களில் தீப்பிடித்து அதிலிருந்த புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் தீயில் எரிந்தன. பொருட்கள் வைப்பு அறை நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததால் தீ மளமளவென பிடிக்காமல் புகை மூட்டமாக அருகில் பரவியது. பரமக்குடி தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக புகை மூட்டத்தை கட்டுப்படுத்தி தீயை அனைத்தனர். பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு சென்றதால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அரசுப்பள்ளியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து பரமக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!