உக்ரைன் போரில் முதல் இந்தியர் பலி

ரஷ்யா- உக்ரைன் போரில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேட்டோ படையுடன் உக்ரைன் சேர தீவிரம் காட்டியதால், ரஷ்யா அதிபர் புதின் அந்நாட்டின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறார். இன்று காலை, கார்கிவ் நகரில் ரஷ்யா ராணுவம் அகுண்டு வீசியதில் இந்திய மாணவர் நவீன் சேகரப்பா என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை டுவிட்டர் வாயிலாக உறுதி செய்த மத்திய வெளியறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்‌ஷி, அவரது இழப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, தொடர்ந்து அவரது பெற்றோருடன் தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!