நாகையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, நாகையில் இன்று ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையின் அத்துமீறிய செயலால், இருநாட்டு மீனவர்களுக்கு இடையே கடற்பரப்பில் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனை தொடர்ந்து,  கடலில் சுமூகமாக இருநாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி, நாகை மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியதை தொடர்ந்து,  வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள்,   இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

 

Translate »
error: Content is protected !!