பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை: எஸ்.பி வேலுமணி

தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை ஒட்டி முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை ஒட்டி சமூக நீதி காத்த காவலர் பெரியாரின் பெருமைகளை கூறும் விதமாகவும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் வழியில் வீறு நடை போட்டு சமூக நீதியை நிலை நிறுத்திய முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகரை சேர்ந்த அதிமுகவினர் பலர் பகுத்தறிவு பகலவனுக்கு மலர் தூவி
மரியாதை செய்தனர்.

Translate »
error: Content is protected !!