2022-ம் ஆண்டில் பொதுமக்களுக்கு உணவு வழங்குவது தான் முக்கியம், அணுஆயுதங்கள் அல்ல என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேசியது உலக நாடுகளை வியப்படைய செய்துள்ளது. அணுஆயுத சோதனை மூலம் உலக நாடுகளை அவ்வப்போது அச்சுறுத்தி வருபவர் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன். இந்நிலையில் பதவியேற்று 10 ஆண்டுகால நிறைவையொட்டி தொழிலாளர் கட்சி கூட்டத்தில் பேசிய அவர், இந்தாண்டு விவசாயிகள் மற்றும் மாணவர்களின் கல்வி குறித்து தனிக்கவனம் செலுத்தப்படும் என்றும், பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகை செய்யப்படும் என்றும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.