நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், வினாக்கள் விடைகள் நேரத்தின் போது கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்னன், உளுந்தூர்பேட்டை தொகுதியில் விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும், 18 ஆண்டுகளாக விவசாயிகள் காத்திருப்பதால் விரைந்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 2021-22ம் ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாகவும், தமிழகத்தில் 4 லட்சத்து 52 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்திருப்பதாகவும் கூறினார்.

நடப்பு ஆண்டில் மட்டும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாகவும், அதில் உளுந்தூர்பேட்டையில் உள்ள 4 ஆயிரத்து 554 விவசாயிகள் பயனடைவார்கள் எனவும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!