பொரித்த சிக்கன் மற்றும் பிரியாணி சாப்பிடும் போட்டி

தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பொரித்த சிக்கன் மற்றும் பிரியாணி சாப்பிடும் போட்டியில் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முக்கல்நாய்க்கன்பட்டியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாப்பாடு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஒருவர் ஒரு கிலோ பொரித்த சிக்கன் மற்றும் பிரியாணியை சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனர். அப்போது அனைவரும் மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் உணவுகளை உண்டனர். இதனைதொடர்ந்து முதலில் சாப்பிட்டு முடித்தவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!