ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு: சென்னையில் 1,600 இடங்களில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்ட முகாம்கள் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் 1,600 இடங்களில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. முகாமில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. முகாம்கள் நடைபெறும் இடங்கள் https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega-vac-det.jsp என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Translate »
error: Content is protected !!