அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து!

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியின் சுற்று சுவர் இடிந்ததால் பரபரப்பு நிலவியது.

சென்னை அசோக் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்ப்பட்டுவருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கு அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை பள்ளியின் சுற்று சுவர் போதிய பராமரிப்பு இல்லாததால் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க கூடிய பள்ளியின் சுவர் இப்படி பராமரிப்பு இல்லாமல் விழுந்தது அந்த பகுதியில் உள்ள மக்களிடத்தில் பெரும் கோவத்தையும் மாணவர்களின் பெற்றோரிடம் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை 5.45 மணிக்கு இடிந்து விழுந்ததால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

Translate »
error: Content is protected !!