ஒரே நாளில் 25, 964 சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 25 ஆயிரத்து 964 சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சுமார் 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் உள்ளனர். ஒரு நாளில் பள்ளிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களின் மூலம் 25 ஆயிரத்து 964 சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இதுவரை 99 ஆயிரத்து 90 சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும், ஒமிக்ரான் வகை கொரோனா வேகமெடுத்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தாத சிறார்கள் அனைவரும் இன்று நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

Translate »
error: Content is protected !!