படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் சூழலில், தினசரி கொரோனா உயிரிழப்பு 893 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 34 ஆயிரத்து 281 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 18 லட்சத்து 84 ஆயிரத்து 937 ஆக உள்ளது.  நேற்று ஒரே நாளில் தீவிர தொற்றுக்கு 893 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 784 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இந்தியாவில் இதுவரை 165 கோடியே 70 லட்சத்து 60 ஆயிரத்து 692 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!