வெளிநாடுகளில் இருந்து வரும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் – தமிழக சுகாதாரத்துறை

ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை வெளிநாட்டுப் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, முடிவுகள் வரும் வரை கண்காணிக்க வேண்டும்.

சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளை பரிசோதிக்க வேண்டும். அறிகுறியற்ற தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் 5 மற்றும் 10 வது நாளில் கொரோனா பரிசோதனைக்கு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து சர்வதேச பயணிகளும் தங்கள் சுயவிவரத்தை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதில் பயணத் தேதிக்கு முந்தைய 14 நாட்களுக்கான பயண விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். கொரோனா பரிசோதனையை 72 மணி நேரத்திற்கு முன் செய்து, அது நெகட்டிவ் என்று கண்டறியப்பட வேண்டும். இது போலியான தகவல் என கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

Translate »
error: Content is protected !!