சென்னை முழுவதும் பரவலாக இடி மின்னலுடன் கனமழை

வளிமண்டல சுழற்சி காரணமாக வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மதியம் 2:30 மணியிலிருந்து கனமழை பெய்தது கே.கே. நகர், அசோக் நகர், எம்.எம்.டி.ஏ வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையார், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலக மழை நீடித்தது.

இடி மின்னலுடன் பெய்த மழையின் காரண பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின் காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Translate »
error: Content is protected !!