ஹரியானாவில் கனமழை.. சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

வடஇந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஹரியானா மாநிலம் குருகிராமின் பல பகுதிகளில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனமழை காரணமாக சாலையில் போக்குவரத்து கடும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நகரத்தில் 64.2 மிமீ மழை பெய்துள்ளது. குருகிராமில்அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!