கர்நாடகாவில் கனமழை.. ஜவகர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையத்தை சூழ்ந்த வெள்ள நீர்

கர்நாடகாவில் பெய்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. தொடர் கனமழை காரணமாக ஜவகர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்தில் ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் வெள்ள நீரில் மூழ்கின.

பெங்களூருவில் பெய்த கனமழையால் அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தண்ணீரில் மூழ்கின. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!