இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,833 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 71 ஆயிரத்து 881 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 24,770 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 31 லட்சத்து 75 ஆயிரத்து 656 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 278 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 49 ஆயிரம் 538 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 92,17,65,405 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!