இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,929 பேருக்கு கொரோனா.. 392 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 44 ஆயிரத்து 683 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 12,509 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 37 லட்சத்து 37 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 1,46,950 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 392 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 60 ஆயிரம் 265 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!