அகவிலைப்படி 28% இருந்து 31 சதவீதமாக உயர்வு

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட அகவிலைப்படிபோன்று புதுச்சேரி மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை 28 சதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!