சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு – சென்னை

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் விட்டுவிட்டு மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சோழவரம் ஏரிக்கு நேற்று 172 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 241 கனஅடியாக அதிகரித்துள்ளது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 815 மில்லியன் கனஅடியாகவும், 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு முழு கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. மேலும்  கண்ணன்கோட்டை ஏரிக்கு வரும் நீர்வரத்தான 216கனஅடி நீர் முழுவதும் உபரிநீராக திறந்துவிடப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!