மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதுபோன்று மாநகர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மேம்பால பணிகள் நடக்கும் கவுண்டம் பாளையம், பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அதுபோன்று மேற்கு தொடர்ச்சி பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

Translate »
error: Content is protected !!