கொரோனா பரவல் அதிகரிப்பு: சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு வலியுறுத்தல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக மருத்துவத்துறை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

இதில், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டியதன் அவசியத்தை வலிறுத்தியுளார்.

டிசம்பர் முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,088 ஆக இருந்தது. 4வது வாரத்தில் 1,720 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. இதை சுட்டிக்காட்டி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனாவிற்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் தடுப்பூசியை அதிகரிக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!