இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 384 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 03 லட்சத்து 71 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 06 ஆயிரத்து 357 பேர் கொரோனா தொற்றிலுருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 76 லட்சத்து 77 ஆயிரத்து 328 அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 573 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 700 ஆக உள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 லட்சத்து 02 ஆயிரத்து 472 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!