கியோவில் இந்திய மாணவர் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கியோவில் மேலும் ஒரு இந்திய மாணவர் ரஷ்ய படையின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்யா ராணுவம் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்துள்ளார். இவர் கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். உக்ரைனில் படித்து வரும் இந்தியாவை சேர்ந்த மேலும் ஒரு மாணவர் இரு தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் கீவ்-ல் மேலும் ஒரு இந்திய மாணவர் ரஷ்ய படையின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாணவர் காயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!