திட்டமிட்டபடி ஜனவரி 16-ஆம் தேதி மஞ்சுவிரட்டு நடைபெறும்

சிவகங்கை மாவட்டம் சிராவயலில்  திட்டமிட்டபடி ஜனவரி 16-ஆம் தேதி மஞ்சுவிரட்டு நடைபெறும் என்று மஞ்சுவிரட்டுவிழா தலைவர் தெரிவித்துள்ளார். சிராவயல் கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதம் மூன்றாம் நாள் அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16-ம் தேதியன்று 300 ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் வரும் 16-ம் தேதியான ஞாயிற்றுகிழமை அன்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில்,  மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்திய பிறகு திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடத்தப்படும் விழா தலைவர் வேலுச்சாமி அம்பலம் கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!