ஜெயக்குமார் ஜாமீன் மனு – காவல்துறை பதிலளிக்க உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு குறித்து பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமீன் கோரி, ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Translate »
error: Content is protected !!