ஜார்கண்ட்டின் அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கு உயர்நீதிமன்றம் தடை

ஜார்கண்ட்டின் அனைத்து அரசு ஊழியர்களின் பதவி உயர்வுகளுக்கும் அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. காவல்துறையில் இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள காவல் உதவி ஆய்வாளர்கள், பொதுப்பிரிவில் போட்டியிடலாம் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

இதனால் பொதுப்பிரிவில் போட்டியிடுவோர் பதவி உயர்வு பெறும் வாய்ப்பு தடைபடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

Translate »
error: Content is protected !!