நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பணியிட மாற்றம் – நன்றி கூறி கடிதம்

மேகாலயாவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட சென்னை தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி சக நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தனிப்பட்ட முறையில் விடைபெறாமல் செல்வதற்காக மன்னிக்கும்படி என சக நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், தன்னுடைய நடவடிக்கைகள் யாரையும் புண்படுத்தி இருந்தால், அது தனிப்பட்ட முறையிலானது இல்லை என்றும், அது உயர் நீதிமன்ற நலனுக்கானதாகவே இருந்திருக்கும் என விளக்கம் அளித்துள்ளார். தன் மீதான சக நீதிபதிகளின் அளவுகடந்த அன்பினால் பூரித்து போயிருப்பதாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். நாட்டிலேயே சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்தான் சிறப்பானவர்கள் என அனைத்து வழக்கறிஞர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்த அழகான மாநிலத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் கடன் பட்டுள்ளதாகவும், இதுவரை தனது சொந்த மாநிலம் என 11 மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் எனவும் கூறி நன்றி வணக்கம் என கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.

Translate »
error: Content is protected !!