ஆய்வாளர் கண்ணதாசன் பணியிடை நீக்கம்

கரூரில், காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த ஆய்வாளர் கண்ணதாசனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

கரூரில் கடந்த 19-ம் நாள் பிளஸ் டூ மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவு காரணமாக அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக வெங்கமேடு காவல் ஆய்வாளர் கண்ணதாசனிடம் புகார் அளிக்க சென்ற உறவினர்களை அவர் அநாகரிகமாக பேசி, மறுநாள் வரை காவல் நிலையத்தில் காக்க வைத்துள்ளார். இதையடுத்து வரப்பட்ட புகாரைத் தொடர்ந்து ஆய்வாளர் கண்ணதாசன் நேற்று காத்திருப்பு பட்டியலிலுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், ஆய்வாளர் கண்ணதாசன் பணியிடை நீக்கம் திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!