மகா சிவராத்திரி சிறப்பு பூஜை – பக்தர்கள் தரிசனம்

மகா சிவராத்திரி முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அம்பாள் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல வண்ண மலர்களால் லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்

Translate »
error: Content is protected !!