மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை வழங்கினால் 4 வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை வழங்கினால் 4 வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது, தமிழகத்தில் 3 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. மத்திய அரசு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பினால், நான்காவது வாரத்திற்கான மெகா தடுப்பூசி முகாம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். மேலும் மக்கள் கூட்டம் கூட்டமாக தடுப்பூசி செலுத்திவருகின்றனர் என்று கூறினார்.

Translate »
error: Content is protected !!