காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் தான்.. பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் தென்னரசு

திமுக அரசை குறை சொல்வதை எதிர்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவருக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், காஞ்சிபுரத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை எதையும் செய்யவில்லை என பொய்கூறி வருகிறார். இந்த 4 மாத திமுக ஆட்சியில் முதலமைச்சர் சொல்லிய 505 வாக்குறுதியில், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகளை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றார்.

மேலும், காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல அவர் தன்னுடைய தவறுகளை மறைப்பதற்கு, திமுக மீது குற்றம்சாட்டி வருகிறார் என்ற அவர், திமுக அரசை குறை சொல்வதை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவருக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமைச்சர் தென்னரசு கூறினார்.

 

Translate »
error: Content is protected !!