புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் எம்.எல்.ஏ உதயநிதி

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை அசோக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 1500 மாணவிகள் படித்து வரும் நிலையில்,  போதுமான வகுப்பறை வசதி இல்லாததால் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.

82 லட்சம் செலவில் கட்டப்பட்ட 4 வகுப்பறை  கட்டடங்களை இன்று திமுக இளைஞர் அணி செயலாளரும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான

உதய நிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4 வகுப்பறை கட்டடங்களை இன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

Translate »
error: Content is protected !!