வருகிற 18ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும்

 

தமிழகத்தில் வருகிற 18ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று மற்றும் நாளை  கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!