காவி கொடி ஏற்றப்பட்ட கல்லூரி கொடி கம்பத்தில் மீண்டும் தேசிய கொடி ஏற்றம்

கர்நாடக மாநிலத்தில் பர்தா விவகாரத்தில் காவி கொடி ஏற்றப்பட்ட கல்லூரியின் கொடி கம்பத்தில் என்.ஐ.யூ.எஸ் மாணவர் அமைப்பினர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து பள்ளிக்கு வந்ததற்கு அனுமதி மறுத்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே கர்நாடகாவின் சிமோகாவில் உள்ள கல்லூரி ஒன்றின் தேசிய கொடி கம்பத்தில் மாணவர்கள் காவி கொடியை ஏற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் காவி கொடி ஏற்றப்பட்ட கொடி கம்பத்தில் என்.ஐ.யூ.எஸ் மாணவர் அமைப்பினர் மீண்டும் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.

Translate »
error: Content is protected !!