டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையில், 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 11ம் தேதி வரையிலும், 2வது கட்டம் மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையிலும் நடைபெறும்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நாளை (புதன்கிழமை) 19.01.2022 அன்று நடைபெற உள்ளது. இந்த சந்திப்பில் நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

Translate »
error: Content is protected !!