தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியதில்லை

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா-வில் பங்கேற்க உள்ள பங்கேற்பாளர்கள் கொரோனா தடுப்பூசிச் சான்றிதழை சமர்பிக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் முதன்மை விருதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது. இந்த வருடத்திற்கான 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!